அபிவிருத்தி வேலைகளிலுள்ள தவறுகளை திருத்திக் கொள்ள, ஊடகங்களே வழியேற்படுத்துகின்றன: அரசாங்க அதிபர் புகழாரம்

🕔 January 6, 2020

– நூருல் ஹுதா உமர் –

ம்பாறை மாவட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் இடம்பெற்ற தவறுகளை திருத்திக் கொள்ள ஊடகவியலாளர்களின் பொறுப்புவாய்ந்த செயற்பாடுகளே காரணம் என்று, மாவட்டத்தின் அரசாங்க அதிபர் டீ .எம். எல்.பண்டாரநாயக தெரிவித்தார்.

மேலும் அபிவிருத்தி வேலைகளைச் செய்யும் போது அவற்றில் நடைபெறும் தவறுகளை ஊடகங்களே சுட்டிக்காட்டி, தவறுகளை திருத்திக் கொள்ள வழியேற்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்காக அரசாங்க தகவல் திணைக்களம் ஒழுங்கு செய்திருந்த ஒரு நாள் ஊடக செயலமர்வும் அம்பாறை மாவட்ட ஊடகப் பிரிவினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வும் இன்று திங்கட்கிழமை காலை அம்பாறை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ .எம். எல். பண்டாரநாயக பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

இந் நிகழ்வில் உதவி அரசாங்க அதிபர்கள் வீ. ஜெகதீசன், ஏ.எம்.ஏ. லத்தீப், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கழுவெவ, லேக் ஹவுஸ் மற்றும் தினமின ஆசிரியர் துமிந்த குருகே உட்பட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர்; “எமது சேவைகளை மக்கள் மயப்படுத்த காரணமாக அமைந்த ஊடகவியலாளர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்