கொழும்பு காணிகளை கோட்டா விற்றார்: முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

🕔 March 28, 2019

கோட்டாபய ராஜபக்ஷ – கொழும்பை அபிவிருத்தி செய்வதாகக் கூறி, மக்களின் காணிகளை பல்தேசிய கம்பனிகளுக்கு விற்று, மக்களை கொழும்பில் இருந்து வெளியேற்றியவர் என்று, நாடாளுமன்றஉறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று  வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு – செலவுத் திட்டத்தின் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்குரிய நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

“ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக கொழும்பு இருந்தமையினால்தான் 94 ஆம் ஆண்டுக்கு பிறகு, அங்கு அபிவிருத்தி எவையும் இடம்பெறவில்லை. மாறாக அந்த மக்களின் காணிகளை விற்று அவர்களை கொழும்பில் இருந்து வெளியேற்றும் திட்டத்தையே, கடந்த அரசாங்கம் மேற்கொண்டது.

ஆனால் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினூடாக இந்த அரசாங்கம் மக்களின் தேவைகளை உணர்ந்து அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது” எனவும் குறிப்பிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்