பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவர் அகப்பட்டார்

🕔 January 9, 2019

– க. கிஷாந்தன் –

பெண்ணொருவரின் தங்கச்சங்கலியினை அறுத்துக் கொண்டு சென்ற நபர் ஒருவரை, பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மடக்கிப்பிடித்த சம்பவம் ஹட்டன் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது.

நோர்வூட் பிரதேச சபையில் பிரதம லிகிதராகக் கடமையாற்றும் பெண்ணொருவரே, இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

ஹட்டன் நீதிமன்ற வீதியில் நேற்று மாலை 5.45 மணியளவில் வேலைக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த மேற்படி பெண்ணை பின்தொடர்ந்த நபர், அவரது தங்கச்சங்கிலியினை அபகரித்துள்ளார்.

இதன்போது குறித்த பெண் கூச்சலிட, ஹட்டன் டிக்கோயா நகரசபையின் காவலாளி மற்றும் பிரதேசவாசிகள் பொலிஸார் ஆகியோர் திருடனை துரத்திப் பிடித்துள்ளனர்.

இதனையடுத்து, தங்கச்சங்கிலி மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்கச்சங்கிலி பறிக்கும் போது பெண்மணியின் கழுத்தில் சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளன.

சந்தேகநபர் பத்தனை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என்றும், இவர் கொழும்பு பகுதியில் தரகர் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேக நபரை இன்று ஆஜர் செய்யவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்