பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்துக் கொண்டோடியவர் அகப்பட்டார் 0
– க. கிஷாந்தன் – பெண்ணொருவரின் தங்கச்சங்கலியினை அறுத்துக் கொண்டு சென்ற நபர் ஒருவரை, பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மடக்கிப்பிடித்த சம்பவம் ஹட்டன் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது. நோர்வூட் பிரதேச சபையில் பிரதம லிகிதராகக் கடமையாற்றும் பெண்ணொருவரே, இந்த சம்பவத்துக்கு முகம் கொடுத்துள்ளார். ஹட்டன் நீதிமன்ற வீதியில் நேற்று மாலை 5.45 மணியளவில்