அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு; இன்று மாலை சந்திப்பு

🕔 November 18, 2018

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் சந்திப்பொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன், ஜனாதிபதி இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்