நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா மீது, மீளகாய் தூள் வீச்சு
– அஹமட் –
நாடாளுமன்றத்தினுள் இன்று வெள்ளிக்கிழமை ஏற்பட்ட குழப்பத்தின் போது, முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான காமினி ஜயவிக்ரம பெரேரா மீது மிளகாய் தூள் வீசப்பட்டதாகத் தெரியவருகிறது.
“மிளகாய்த் தூளை என் மீது வீசியவர்களை என்ன செய்வீர்கள் ஜனாதிபதி? இது தான் உங்கள் ஜனநாயகமா?” என்று, காமினி ஜெயவிக்ரம பெரேரா கண்ணீருடன் ஊடகவியலாளர்கள் முன்னால் கேள்வியெழுப்பியதாக, சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆர். சிவராஜா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் நாடாளுமன்றினுள் உறுப்பினர்கள் சிலர் கத்தி போன்ற ஆயுதங்களுடன் காணப்பட்டமையினை அடுத்து, இன்றைய தினம், முழுமையான உடல் பரிசோதனையின் பின்னரே நாடாளுமன்றத்தினுள் உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையிலேயே, நாடாளுமன்ற உறுப்பினர் காமினி ஜெயவிக்ரம பெரேரா மீது, மிளகாய் தூய் வீசப்பட்டுள்ளது.