மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதியை கொல்ல திட்டமிடப்பட்டிருந்தது: நாமல் குமார, அதிர்ச்சித் தகவல்

🕔 October 29, 2018

பாதாள உலகத்தைச் சேர்ந்த மாகந்துர மதுஸ் என்பவர் மூலம், ஜனாதிபதி மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாக, ஊழலுக்கு எதிரான படை அணியின் நடவடிக்கை பணிப்பாளர் நாமல் குமார தகவல் வெளியிட்டுள்ளார்.

முன்னாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, இந்தக் கொலைத் திட்டத்தை முன்னெடுக்க பணிக்கப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேற்படி கொலை சதிமுயற்சியின் பின்னணியில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் சரத்பொன்சேகா ஆகியோர் இருந்தனர் என்றும் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவல்களை வெளிப்பிடுத்தினார்.

“ரணில் விக்கிரமசிங்க மற்றும் சரத்பொன்சேகா ஆகியோரே இந்த கொலை சதி தொடர்பில் திட்டமிட்டனர்.

இந்த சதித் திட்டத்துக்கு பாதாள உலகத் தலைவன் மாகந்துர மதுஸ் என்பரை பயன்படுத்த தீர்மானித்ததோடு நாலக சில்வா திட்டத்தை முன்னெடுக்க பணிக்கப்பட்டார்.

எனவே கைது செய்யப்பட்டுள்ள நாலக சில்வா தனது சொந்தத் தேவைக்காக செயற்படவில்லை. ஆகவே, அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினாலும் பரவாயில்லை” எனத் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்