ஹக்கீம், றிசாட்; ரணிலுக்கு ஆதரவளிக்க தீர்மானம்

🕔 October 27, 2018

– அஹமட் –

க்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதற்கு, மு.காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு முன்னணி உள்ளிட்ட பங்காளிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அலறி மாளிகையில் இன்று சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மேற்படி கட்சிகளின் தலைவர்கள் இதனை உறுதிப்படுத்தினர்.

மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம், மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஜாதிக ஹெல உறுமய கட்சி செயலாளர் சம்பிக்க ரணவக்க உள்ளிட்டோர் மேற்படி ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டினை தெளிவுபடுத்தினர்.

மு.காங்கிரஸ் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ள அதேவேளை, மக்கள் காங்கிரஸ் 05 உறுப்பினர்களையும், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு முன்னணி 06 உறுப்பினர்களையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்