பிரதமர் பெற்றுள்ள அமைச்சு, வேறொருவர் வசமாகும்: துமிந்த திசாநாயக்க

🕔 February 26, 2018

ட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

மருதானையிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் நாட்களில், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு வேறொருவரிடம் கையளிக்கப்படுமெனவும் இதன்போது அவர் தெரிவித்தார்.

குறித்த அமைச்சு பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளியான செய்தியொன்றினை, நேற்றிரவு நாம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: சட்டம் ஒழுங்கு அமைச்சை, இரண்டு வாரங்களுக்கே ரணில் வைத்திருப்பார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்