அர்ஜுன் அலோசியஸ்,கசுன் பாலிசேன சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள பெபேசுவல்ஸ் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோர், இன்று சனிக்கிழடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பிணைமுறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர் இருவரும் மார்ச் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே, இவர்கள் முதுகு வலியால் அவதிப்படுவதாகக் கூறி, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.
பிரமுகர்கள் சிறையில் அடைக்கப்படும் போது, அவர்கள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சலுகைகளைப் பெற்றுக் கொள்வது வழமையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.