கடலில் கடத்திய 05 கோடி ரூபாய் பெறுமதியான தங்கக் கட்டிகள்; கடற்படையினரிடம் சிக்கின

🕔 January 17, 2018

பாறுக் ஷிஹான் –

ங்கக் கட்டிகளை சிறிய படகு ஒன்றில் கடத்துவதற்கு முயற்சித்தவர்களை, நேற்றிரவு காங்கேசன்துறை கடற்பரப்பில் வைத்து, கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

படகிலிருந்த மீன் வலைகளில் சூட்சுமமாக மறைக்கப்பட்ட நிலையில் 70 தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

இலங்கையைச் சேர்ந்த ஆண்கள் இருவர் மேற்படி படகில் இருந்ததாகவும், ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கடற்படையினர், அந்தப் படகினை வழிமறித்து சோதனை செய்தபோதே, தங்கக் கட்டிகள் சிக்கியதாகவும் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமான்டர் தினேஷ் பண்டார தெரிவித்துள்ளார்.

கைப்பற்றப்பட்ட ஒவ்வொரு தங்கக் கட்டியும் 100 கிராம் எடையுடையவையாகும். இவற்றின் மொத்தப் பெறுமதி 05 கோடி ரூபாயாகும்.

படகிலிருந்தவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு கொண்டு செல்லும் பொருட்டு, இந்தத் தங்கக் கட்டிகள் கடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்