30 அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து; 16 பேர் படுகாயம்

🕔 May 18, 2017

– க. கிஷாந்தன் –

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் காயமடைந்த 16 பேர், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

நுவரெலியாவிலிருந்து பட்டிப்பொல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதி கட்டுமான பகுதியில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகிறது.

இவ்விபத்தில் சாரதி உட்பட 16 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள், நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்