சீன புலமைப் பரிசிலை கைவிட கோட்டா முடிவு

🕔 April 19, 2017

சீனாவில் தங்கியிருந்து ஒரு வருட கற்கை நெறியொன்றினை நிறைவு செய்யும் தனது திட்டத்தினை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கைவிடத் தீர்மானித்துள்ளார் எனத் தெரியவருகிறது.

புலமைப் பரிசில் ஒன்றின் மூலம் இந்தக் கற்கை நெறியினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கிடைத்திருந்தது.

ஆயினும், ஒரு வருட காலம் நாட்டை விட்டும் தூரமாகியிருப்பதற்கு முன்னாள் செயலாளர் கோட்டா தயக்குவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போது புலமைப் பரிசில் கற்கையொன்றினை நிறைவு செய்வதற்காக சிங்கப்பூரில் சென்றிருக்கும் கோட்டா, இம்மாத இறுதியில் நாடு திருப்புவார் எனத் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்