சிரியாவில் நடைபெறும் தாக்குதல்களை, இலங்கை கண்டிக்க வேண்டும்: முஜிபுர் ரஹ்மான்
சிரியாவில் ரசாயன வாயு தாக்குதல் மூலம் அப்பாவி மக்களை கொன்று குவித்த பசர் அல் அசாத் மற்றும் ரஷ்ய படையினரின் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் பகிரங்கமாக கண்டிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் இதற்கு பதில் தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்க படையினர், எல்லை மீறியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிரியாவின் இட்லிப் பகுதியில் அந்நாட்டு அரச படையினர் மேற்கொண்ட ரசாயன
அத்துடன் இதற்கு பதில் தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்க படையினர், எல்லை மீறியுள்ளனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சிரியாவின் இட்லிப் பகுதியில் அந்நாட்டு அரச படையினர் மேற்கொண்ட ரசாயன
வாயுத் தாக்குதலில், அப்பாவி பொதுமக்களே பலியாகினர். இதற்கு பதில் தாக்குதலை அமெரிக்கப்படையினர் மேற்கொண்ட போது, அதிலும் பொதுமக்களே உயிரிழந்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சிரியாவின் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் இட்லிப் பகுதியில் அந்நாட்டு படையினர் மேற்கொண்ட ரசாயன வாயு தாக்குதல் மிகவும் கொடூரமானதாகும்.
இத்தாக்குதலில் 30 குழந்தைகள் உட்பட 86 பேர் உயிரிழந்தனர். அத்துடன் நூற்றுக் கணக்கானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது மிகவும் கொடூரமான தாக்குதலாகும்.
இந்த தாக்குதல் குறித்து அரபு நாடுகள் மெளனம் காப்பது கவலைக்குரியதாகும். சவூதி நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், அவர்கள் அசாத் மற்றும் ரஷ்யாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு ரசாயன தாக்குதலுக்கு பதில் தாக்குதல் வழங்கிய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவளித்திருக்கின்றனர்.
இரண்டு தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இவற்றால் மனிதநேயம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதுடன், மிகக் கொடூரமான யுத்தக் குற்றமும் அரங்கேற்றப்பட்டுள்ளன. அணிசேரா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் கண்டனமும் வெளியிடவில்லை.
எனவே அசாத் – ரஷ்ய கூட்டுப்படையினரின் தாக்குதலையும் அமெரிக்காவின் நடவடிக்கையையும் கண்டித்து இலங்கை அரசாங்கம் பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டும்.
இதற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
சிரியாவின் அப்பாவிப் பொதுமக்கள் அநியாயமாக கொன்று குவிக்கப்படுகின்றனர். கடந்த வாரம் இட்லிப் பகுதியில் அந்நாட்டு படையினர் மேற்கொண்ட ரசாயன வாயு தாக்குதல் மிகவும் கொடூரமானதாகும்.
இத்தாக்குதலில் 30 குழந்தைகள் உட்பட 86 பேர் உயிரிழந்தனர். அத்துடன் நூற்றுக் கணக்கானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இது மிகவும் கொடூரமான தாக்குதலாகும்.
இந்த தாக்குதல் குறித்து அரபு நாடுகள் மெளனம் காப்பது கவலைக்குரியதாகும். சவூதி நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும், அவர்கள் அசாத் மற்றும் ரஷ்யாவிற்கு எதிர்ப்புத் தெரிவித்துவிட்டு ரசாயன தாக்குதலுக்கு பதில் தாக்குதல் வழங்கிய அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஆதரவளித்திருக்கின்றனர்.
இரண்டு தாக்குதல்களையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இவற்றால் மனிதநேயம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளதுடன், மிகக் கொடூரமான யுத்தக் குற்றமும் அரங்கேற்றப்பட்டுள்ளன. அணிசேரா கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தக் கண்டனமும் வெளியிடவில்லை.
எனவே அசாத் – ரஷ்ய கூட்டுப்படையினரின் தாக்குதலையும் அமெரிக்காவின் நடவடிக்கையையும் கண்டித்து இலங்கை அரசாங்கம் பகிரங்க அறிக்கையை வெளியிட வேண்டும்.