உயர்தரத்தில் சாதனை படைத்த மாணவனுக்கு, பிரதியமைச்சர் ஹரீஸ் மடிக் கணினி அன்பளிப்பு

🕔 September 20, 2016

harees-087
– அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன் –

ல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி மாணவன்மயில்வாகனம் சாறுஜன் விஞ்ஞானப் பிரிவில் சகல பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியினைப் பெற்று, மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமையினை பாராட்டி கௌரவிக்கு முகமாக, மெஸ்றோ அமைப்பினால் மடிகணினி வழங்கி வைக்கும் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் பிரதி அதிபர் எம்.சுபாந்திர ராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு, ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் மெஸ்றோ அமைப்பின் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த மடிக் கணினியை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கல்முனை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் எஸ்.எல். அப்துல் றஹீம், மெஸ்ரோ அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். நசீல், செயலாளர் சட்டத்தரணி எம். சுல்பி, பிரதிஅமைச்சரின்  இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, கார்மேல் பற்றிமா கல்லூரி பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கடந்த வருடம் உயர்தரப் பரிட்சையில் சாதனை படைத்த மாணவன் மயில்வாகனம் சாறுஜனை பாராட்டி கொளரவிப்பதன் மூலம், அந்த மாணவனை இன்னும் பல சாதனைகள் புரிய வைக்க முடியும். மேலும், ஏனைய மாணவர்களையும் சாதனையாளர்களாக மாறுவதற்கும் வழிவகுக்கலாம் என்று விளையாட்டுத்துறைபிரதி அமைச்சர் ஹரீஸ் தானாக முன்வந்து குறிந்த மாணவனுக்கு மடிகணினி வழங்கி வைத்தார்.

இதன்போது சாதனை மாணவன் உரையாற்றுகையில், வெற்றிக்கு பங்களிப்புச் செய்த அனைவருக்கு நன்றி தெரிவித்ததோடு, தன்னை பாராட்டி கௌரவித்து தனது மேற்படிப்பினை சிறந்த முறையில்  முன்னெடுத்துச் செல்வதற்கு உதவியாக, மடி கணினியினை வழங்கி வைத்த பிரிதி அமைச்சர் ஹரீஸ் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்ததோடு அவரின் பணிகள் தொடர வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்