பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’
முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பசில் ராஜபக்ஷ – இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவரை எதிர்வரும் 08 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் தம்மிக ஹேமபால உத்தரவிட்டார்.
திவிநெகும அபிவிருத்தி நிதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில், கடந்த ஜுலை 18 ஆம் திகதி கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.