அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களுக்கான மேலங்கி வழங்கும் நிகழ்வு

🕔 June 12, 2016

ADJF - T Shirt - 091
– றிசாத் ஏ காதர், எஸ்.அஷ்ரப்கான் –

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களுக்கு, பேரவையின் இலச்சினை அடங்கிய மேலங்கி (ரி ஷேட்) வழங்கும் நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரீடியன் மண்டபத்தில் இடம்பெற்றது.

பேரவையின் தலைவர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் ஊடக அங்கத்தவர்கள் தமக்கான மேலங்கிகளைப் பெற்றுக் கொண்டனர்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை ஆரம்பிக்கப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் பல்வேறு அடைவுகளை எட்டிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, பேரவையின் ஏற்பாட்டில் பல பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டுள்ளதோடு, ஊடக அங்கத்தவர்களின் திறமைகளை வளர்த்தெடுக்கும் வகையிலான செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன.

அந்த வகையில், இன்றைய தினம் பேரவையின் இலட்சினை அடங்கிய மேலங்கிகள் அங்கத்தவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில், பேரவையின் தலைவருடன், செயலாளர் எம். சஹாப்தீன், அமைப்பாளர் யு.எல். றியாஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு அங்கத்தவர்களுக்கான மேலங்கிகளை வழங்கி வைத்தனர்.ADJF - T Shirt - 090ADJF - T Shirt - 092 ADJF - T Shirt - 093 ADJF - T Shirt - 095 ADJF - T Shirt - 096 ADJF - T Shirt - 097 ADJF - T Shirt - 098 ADJF - T Shirt - 094

Comments

புதிது பேஸ்புக் பக்கம்