பாகுபாடு காட்டுவதை கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கைவிட வேண்டும்: இம்ரான் மஹ்ரூப்

🕔 February 13, 2016

Imran MP - 9865திபர் நியமனங்களின் போது அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொதுவானதொரு தீர்மானத்தைக் கடைப்பிடிக்காமல், பாகுபாட்டின் அடிப்படையில் செயற்படுவதை, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தினர் கைவிட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நாடாமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களை நிரப்பும் போது, கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் கடைப்பிடித்து வரும் பாகுபாடான நடவடிக்கையினைக் கண்டித்து, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே, மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

நாட்டில் சட்டம் ஒன்று தான் அது எல்லாத் தரப்பினருககும் பொதுவாகவே அமுல் படுத்தப்பட வேண்டும். சட்டத்தில் ஆளுக்காள் வேறுபாடுகாட்ட முடியாது. அதே போல இனத்துக்கு இனம் வேறுபாடும் காட்ட முடியாது.

ஆனால், கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் – தான் விரும்பியபடி பாடசாலைகளில் பாகுபாடு காட்டி வருகின்றது.

சில பாடசாலைகளில் அதிபர் வெற்றிடமொன்று ஏற்படுகின்ற போது, தமக்கு விருப்பமான ஒருவரை, அவரது தகைமைகளைக் கவனத்தில் எடுக்காது, பதில் அதிபராக நியமிக்கும் செயற்பாடுகளை கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கடந்த காலங்களில் முன்னெடுத்தது.

இன்னும் சில பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்படும் போது, முறைப்படி விண்ணப்பம் கோரி அதன் மூலம் நியமனம் வழங்கப்படுகின்றது.

ஏன் இந்தப் பாகுபாடு? இப்படி பாகுபாடு காட்டும் சட்டம் நாட்டில் உள்ளதா? நல்லாட்சி என்றால் நேர்மை இருக்க வேண்டுமே?

திருகோணமலை கல்வி வலயத்தில், அண்மையில் சில பாடசாலைகளில் அதிபர் வெற்றிடம் ஏற்பட்ட போது, விண்ணப்பம் கோராமலே பதில் அதிபர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

ஆனால், தற்போது வெள்ளைமணல் அல் அஸ்ஹர் மகா வித்தியாலயத்தில் அதிபர் வெற்றிடம் ஏற்பட்டுள்ள போது, அதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

கல்வி என்பது புனிதமானது. அது எல்லோருக்கும் அறிவு ஒளியைத் தருவது. எனவே பாடசாலை நிர்வாகத்தில் இனரீதியான பாகுபாடு காட்டப்படக்கூடாது. விண்ணப்பம் கோருவதென்றால் எல்லாப் பாடசாலைகளுக்கும் விண்ணப்பம் கோர வேண்டும்.

கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் இந்த விடயங்களில் நேரடியாகத் தலையிட்டு, இப்படியான பாகுபாடுகள் இடம்பெறாமல் பார்க்க வேண்டியமை மிக அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்