மைத்திரியின் பதவிக் காலம் குறித்து ஆராய, ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு நியமனம்

🕔 January 11, 2018

னாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய பதவிக்காலம் தொடர்பில் ஆராய்வதற்காக, 05 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழுவை பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நியமித்துள்ளார்.

ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்றதன் பின்னர், அரசியலமைப்பில் 19வது திருத்தச் சட்டத்தை மேற்கொண்டார். இதற்கமைய, ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆயினும், குறித்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், இலங்கை ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் ஆறு வருடங்களாக இருந்தது.

எனவே, மைத்திரிபால சிறிசேனவின் பதவிக் காலம் தற்போதுள்ள திருத்தத்திற்கு அமையவா அல்லது முன்னரான அரசியலமைப்பின் படி இருக்க வேண்டுமா என்பதை ஆராயும் நோக்கில், உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி கருத்துக் கோரியுள்ளார்.

இதற்கு அமையவே, குறித்த குழுவை பிரதம நீதியரசர் பிரியசாத் டேப் நியமித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்