பொத்தானை: களவுபோகும் நிலம் 0
– முகம்மது தம்பி மரைக்கார் –சிறுபான்மை மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாதல், இலங்கையில் நிலவி வரும் நீண்ட காலப் பிரச்சினையாகும். ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, தமிழர் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலத்தினை அரசாங்கமே கையகப்படுத்திக் கொள்கின்றமை ஆக்கிரமிப்பின் உச்ச கட்டமாகும். யுத்தம் நிலவிய காலப் பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராணுவத்தினர் நேரடியாக