மக்கள் காங்கிரசின் மகளிர் பிரிவுகள்; கல்முனையில் அங்குரார்ப்பணம் 0
– எஸ்.எல்.அப்துல் அஸீஸ் –அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட 16, 17ஆம் வட்டாரங்களுக்கான மகளிர் பிரிவுகளின் அங்குரார்ப்பணம் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை கல்முனை மாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். அப்துல் மனாப்பின் அலுவலக வளாகத்தில் இடம்பெற்றது.இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அங்கத்தவர்களாக நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் இணைந்து கொண்டனர்.