தென்கிழக்கு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல் நாள் அமர்வில் ஜனாதிபதியின் பாரியார் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க பிரதம பேச்சாளர் 0
– எஸ். அஷ்ரப்கான் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில், வேந்தர் பாயிஸ் முஸ்தபா முன்னிலையில் இன்று (13) பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. பட்டமளிப்பு விழா முதல் அமர்வின்போது, களனிப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க பிரதம பேச்சாளராக கலந்துகொண்டார்.