சிறுநீரக வர்த்தகத்தில் 05 தனியார் மருத்துவமனைகள் தொடர்பு; விசாரணைக்குழு அறிக்கை 0
சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வர்த்தகத்தில், இலங்கையிலுள்ள 05 தனியார் மருத்துவமனைகள் ஈடுபட்டதாக, தெரியவருகிறது. இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஐவர் அடங்கிய குழுவினர் இவ்விடயத்தினைக் கண்டறிந்துள்ளனர். மேலும், இதில் இலங்கை மருத்துவர்கள் சிலரும் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. மேற்படி ஐவர் அடங்கிய குழுவின் அறிக்கை, சுகாதாரத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவிடம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கையளிக்கப்பட்டது.