நாப்பது வயது பெண்ணின் இடுப்பிலிருந்து, 04 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் சிக்கியது 0
நான்கு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய நகைகளை கடத்த முயன்ற 40 வயதுடைய பெண் ஒருவர், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை கைதுசெய்யப்பட்டார். துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த இவரிடமிருந்து சுமார் 7.8 கிலோகிராம் நகைகள் கைப்பற்றப்பட்டதாக, சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பணிப்பாளருமான சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.