குறிபார்த்துச் சுடுதலில் வெற்றி பெற்று, கல்முனை ஸாஹிரா கல்லூரி மாணவன் சாதனை 0
– எம்.வை. அமீர், அஸ்ஹர் இப்றாஹிம் – இலங்கை பாடசாலைகள் குறிபார்த்துச் சுடும் விளையாட்டு சம்மேளனம் கல்வியமைச்சுடன் இணைந்து நடத்திய, அம்பாறை மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான குறிபார்த்துச் சுடும் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவன் என்.எம். நிஸாத் இரண்டாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார். கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி வரலாற்றில், குறிபார்த்துச் சுடும் போட்டியில் மாணவரொருவர் வெற்றியீட்டிமை இதுவே முதல் தடவையாகும்.