பாடசாலைகளில் 10 முதல் 13 வரையிலான வகுப்புகள் நாளை ஆரம்பம்: இறுதித் தவணையை நீடிக்கவும் யோசனை 0
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும், 10 முதல் 13 வரையான வகுப்புகளுக்கு கற்றல் நடவடிக்கைகள் நாளை (08) தொடக்கம் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காகக் குறித்த தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு,