அவசரகால நிலை 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் 0
அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கும் யோசனை நாடாளுமன்றில் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் இன்று (27) இடம்பெற்ற வாத விவாதங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பின்போது யோசனைக்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்தபோது ஜூலை 17ஆம் திகதியன்று அவசரகால நிலை நடைமுறைக்கு