துறைமுக அதிகார சபையில் 5850 மில்லியன் ரூபா, கடந்த வருடம் மேலதிக நேரக் கொடுப்பனவாக வழங்கப்பட்டுள்ளது: ‘கோப்’ குழுவில் அம்பலம் 0
இலங்கை துறைமுக அதிகார சபையில், கடந்த ஆண்டுக்காக 5850 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க ‘கோப்’ குழுவில் தெரியவந்துள்ளது. அதிக ஊழியர்கள் இருந்த துறைகளில் மாத்திரம், கடந்த ஆண்டு 1,173 மில்லியன் ரூபா மேலதிக கொடுப்பனவு செலுத்தப்பட்டுள்ளது. தகைமையற்ற சுமார் 1,500 பேர் ஆட்சேர்க்கப்பட்டுள்ளதுடன், குறித்த தொழில் தகைமையுடையவர்களின் கடமைக்காக, கூடுதல் மேலதிக கொடுப்பனவு