Back to homepage

பிரதான செய்திகள்

பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி

பாகிஸ்தான்: தேர்தல் சாவடியருகில் குண்டு வெடிப்பு; 28 பேர் பலி 0

🕔25.Jul 2018

பாகிஸ்தானில் இன்று புதன்கிழமை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 28 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான் குவட்டாவில் ஒரு வாக்குச்சாவடி அருகே இந்தக் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இந்தத் தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, தற்கொலைக் குண்டுத்தாக்குதலே இடம்பெற்றுள்ளதாகவும்

மேலும்...
அளுத்கம கலவரத்தில் சொத்துக்களை இழந்தோருக்கு நஷ்டஈடு; ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் நாளை கிடைக்கின்றன

அளுத்கம கலவரத்தில் சொத்துக்களை இழந்தோருக்கு நஷ்டஈடு; ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் நாளை கிடைக்கின்றன 0

🕔25.Jul 2018

அளுத்கம கலவரத்தில் பெருமளவு சொத்துக்களை இழந்த 128 பேருக்கான 182 மில்லியன் ரூபாய் நட்டஈடு நாளை வியாழக்கிழமை வழங்கி வைக்கப்படவுள்ளது.நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் இந்த நஷ்டஈடு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வு நாளை வியாழக்கிழமை மாலை 03 மணிக்கு தர்கா நகர் ஸாஹிரா கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.சுகாதாரம்,

மேலும்...
நசீர் ஒதுக்கிய நிதியை, தட்டிப் பறித்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனையின் அவலம்

நசீர் ஒதுக்கிய நிதியை, தட்டிப் பறித்தார் ஹக்கீம்: அட்டாளைச்சேனையின் அவலம் 0

🕔24.Jul 2018

– அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதியிலிருந்து, அவருடைய சொந்த பிரதேசமான அட்டாளைச்சேனைக்கு ஒதுக்கியிருந்த 14 லட்சம் ரூபாய், இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறியக் கிடைக்கிறது. அட்டாளைச்சேனை பிரதேச செயலகத் தரப்புகளும் இதனை புதிது செய்தித்தளத்துக்கு உறுதி செய்தன. ஏ.எல்.எம். நசீர் ஒதுக்கிய

மேலும்...
சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு

சிரியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔24.Jul 2018

சிரியாவின் போர் விமானமொன்றினை – தனது வான் எல்லையில் வைத்து சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. தரையிலிருந்து வான்நோக்கி செல்லும் இரண்டு ஏவுகணைகளை சிரியாவின் சுகோய் ரக போர் விமானங்களை நோக்கி செலுத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதியான கோலன் ஹைட்ஸில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக இஸ்ரேலிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்...
பெண்கள் பெற்றுக் கொண்ட நுண்கடனில், 01 லட்சம் ரூபாவினை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் முடிவு

பெண்கள் பெற்றுக் கொண்ட நுண்கடனில், 01 லட்சம் ரூபாவினை ரத்துச் செய்வதற்கு அரசாங்கம் முடிவு 0

🕔24.Jul 2018

பெண்களுக்கு நுண் நிதி நிறுவனங்கள் வழங்கிய கடன் தொகையில் 01 லட்சம் ரூபாய் வரையான பகுதியை ரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான யோசனை நிதி அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்திருந்தார். வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் உள்ள பெண்களுக்கே இந்த விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது. திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,

மேலும்...
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 486 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் தெரிவிப்பு

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் 486 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை: உயர்கல்வி அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Jul 2018

உயர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், நாடு திரும்பாத 486 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். உயர்கல்வியை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்கள் பணியாற்றிய பல்கலைக்கழகங்களில் இருந்து விசேட விடுமுறையில் வெளிநாடு சென்ற நூற்றுக்கணக்கான விரிவுரையாளர்கள், அவர்களது விடுமுறை காலம் நிறைவடைந்த நிலையில் நாடு திரும்பவில்லை எனக்

மேலும்...
சுஜப் எம். காசிம் எழுதிய நூல் அறிமுக விழா; அக்கரைப்பற்றில் சிறப்பாக நடந்தேறியது

சுஜப் எம். காசிம் எழுதிய நூல் அறிமுக விழா; அக்கரைப்பற்றில் சிறப்பாக நடந்தேறியது 0

🕔24.Jul 2018

– பாறுக் ஷிஹான்-சிரேஷ்ட ஊடகவியலாளர் சுஐப் எம் காசிம் எழுதிய  ‘வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்’ எனும்  நூலின் அறிமுக விழா, நேற்று திங்கட்கிழமை அக்கரைப்பற்று  ரி.எப்.சி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.அஷ்ஷெய்க் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மீன்பிடித்துறை கடல்வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.

மேலும்...
உலமா சபையுடன் பேசும் போது, முஸ்லிம் பெண் அமைப்புக்களுடனும் கலந்துரையாட வேண்டும் என கோரிக்கை

உலமா சபையுடன் பேசும் போது, முஸ்லிம் பெண் அமைப்புக்களுடனும் கலந்துரையாட வேண்டும் என கோரிக்கை 0

🕔23.Jul 2018

– அஷ்ரப் ஏ சமத் –முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட மறுசீரமைப்பு தொடர்பாக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் நாளை செவ்வாய்கிழமை கலந்துரையாடும்போது, முஸ்லிம் பெண்கள் அமைப்பினர் மற்றும் இத்துறையில் முஸ்லிம் பெண்கள் விவாகரத்து விடயமாக பாடுபடுகின்ற முஸ்லிம் பெண் சட்டத்தரணிகள் அமைப்பினரையும் கலந்தாலோசித்தல் வேண்டும்  என, முஸ்லிம்

மேலும்...
கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்குவது தொடர்பில், ஆளுநருடன் பேசியுள்ளேன்: அமைச்சர் ஹிஸ்புல்லா தகவல்

கிழக்கு பட்டதாரிகளுக்கு அரச தொழில் வழங்குவது தொடர்பில், ஆளுநருடன் பேசியுள்ளேன்: அமைச்சர் ஹிஸ்புல்லா தகவல் 0

🕔23.Jul 2018

கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை, இருக்கின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு நியமிப்பது சம்பந்தமாக, கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் 08 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வகுப்பறை கட்டிட அடிக்கல் நடும் விழா இன்று திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில், அதிபர்

மேலும்...
கமருர் ரிழா எழுதிய  மண் வாசனை நூல் வெளியீடு

கமருர் ரிழா எழுதிய மண் வாசனை நூல் வெளியீடு 0

🕔23.Jul 2018

– எம்.ஐ.எம். அஸ்ஹர், எம்.வை. அமீர் – சாய்ந்தமருது எம்.சீ.எம். கமருர் ரிழா எழுதிய ‘மண்வாசனை ‘ எனும், இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்குரிய கிராமிய வட்டாரவழக்குச் சொற்களைக் கொண்ட நூல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை, கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி ராசவாசல் முதலியார்எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது. ஸஹிரியன் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி

மேலும்...
முஸ்லிம் மீடியா போரம் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் தெரிவு

முஸ்லிம் மீடியா போரம் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் தெரிவு 0

🕔22.Jul 2018

– பாறுக் ஷிஹான் –ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தலைவராக என்.எம். அமீன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.முஸ்லிம் மீடியா போரம் – இன் 22ஆவது  வருடாந்த பொதுக் கூட்டம்  நேற்று சனிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்கள  புதிய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.இதன் போது நடைபெற்ற நிருவாகத் தெரிவின் போதே, மீண்டும் தலைவராக அமீன் தெரிவானார்.மீடியா

மேலும்...
ஆசியாவில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, அறுகம்பே தெரிவு

ஆசியாவில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக, அறுகம்பே தெரிவு 0

🕔22.Jul 2018

ஆசியாவிலுள்ள சிறந்த 10 சுற்றுலா இடங்களில் ஒன்றாக இலங்கையிலுள்ள அறுகம்பே தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகில் பிரபலமானதும் மிகப் பெரிய பயண வழிகாட்டி புத்தகமுமான “த லோன்லி பிளானட்” இதனை அறிவித்துள்ளது. ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்கள் என, லோன்லி பிளானட் வெளியிட்டுள்ள 10 இடங்களைக் கொண்ட பட்டியலில், அறுகம்பே 8வது இடத்தில் உள்ளது. இலங்கையின் கிழக்கு

மேலும்...
காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி

காசாவில் இடம்பெற்ற சண்டையில் 04 பலஸ்தீனர்கள் பலி 0

🕔21.Jul 2018

இஸ்ரேல் ராணுவ வீரர் ஒருவரும் நான்கு பாலத்தீனர்களும் நேற்று வெள்ளிக்கிழமை காசாவில் இடம்பெற்ற சண்டையில் கொல்லப்பட்டனர். இந்த நிலையில், தற்போது காசா எல்லையில் ஓரளவு அமைதி நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் மற்றும் எகிப்தின் மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையில் பின்னிரவில் போர் நிறுத்தம் ஏற்பட்டது. எல்லையில் ஊடுருவ பாலத்தீன தீவிரவாதிகள் முயற்சி மேற்கொண்டதாக

மேலும்...
சித்திலெப்பை ஆய்வுப் பேரவையின் தேசிய ஆய்வு மாநாடு, நாளை கொழும்பில்

சித்திலெப்பை ஆய்வுப் பேரவையின் தேசிய ஆய்வு மாநாடு, நாளை கொழும்பில் 0

🕔21.Jul 2018

‘முஸ்லிம் தேசியமும் சகவாழ்வும்’ எனும் தொனிப்பொருளில், சித்தி லெப்பை ஆய்வுப் பேரவையின் முதலாவது தேசிய ஆய்வு மாநாடு கொழும்பு – 06,  வெள்ளவத்தை, இலக்கம் 07, லில்லி அவெனியுவில் அமைந்துள்ள, சோனக இஸ்லாமிய கலாசார நிலைய மண்டபத்தில், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு நாள் நிகழ்வாக  இடம்பெறவுள்ளது. முதலாவது ஆய்வரங்கு காலை 9 மணி முதல் 11 மணி

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ்

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு எதிரான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வாபஸ் 0

🕔21.Jul 2018

கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீன் மீது, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்திருந்த சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு நேற்று வெள்ளிக்கிழமை தனது மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார். மேன்முறையீட்டு நீதிமன்ற வழக்கு C/A/3/18 Contempt எனும் இலக்கத்தையுடைய மேற்படி வழக்கு, மேன் முறையீட்டு நீதி மன்றத்தின் சமர்ப்பணத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது,  குறித்த சட்டத்தரணி இந்த அவமதிப்பு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்