
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என – போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தீர்மானித்துள்ளார்.
ஹோமாகம தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தி 20 வருடங்களுக்கும் மேலாக தான் அரசியலில் இருந்ததாகவும், பிரதி அமைச்சராகவும் அமைச்சரவை அமைச்சராகவும் செயற்பட்டதாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
மேலும், தன்னால் இயன்ற அதிகபட்ச சேவையை மக்களுக்கு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீண்டகாலமாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருந்த ஹோமாகம தேர்தல் மக்களை தான் பிரதிநிதித்துவப்படுத்தியதையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், ஹோமாகம நகரை கல்வியின் மையமாக மாற்றியமைக்காகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
திரைப்படம் தயாரிப்பதில் தனது நேரத்தை செலவிட திட்டமிட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.



