தேர்தலுக்கு பணம் வழங்கத் தயார்

🕔 July 27, 2024

னாதிபதித் தேர்தலுக்காக – தேர்தல் ஆணையாளர் கோரும் பணத்தை வழங்க திறைசேரி தயார் என்று, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த வரவு – செலவுத் திட்டத்தில், தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், தேர்தல் ஆணையாளர் அலுவலகம் ஏறக்குறைய 08 பில்லியன் ரூபாய் மதிப்பீட்டை அனுப்பியுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அச்சிடுதல், பாதுகாப்பு, எரிபொருள், வாக்குப் பெட்டிகள் போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்கும் பணத்தை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாகவும் நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்