ஜனாதிபதி தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கான தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாக ரணில் தெரிவிப்பு

🕔 July 4, 2024

னாதிபதி பதவிக்காலம் 05 வருடங்கள் என உறுதியாக தான் நம்புவதாகவும், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சி.டி. லீனாவ் எனும் தொழிலதிபர் – தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் குறித்த விளக்கத்தை உச்ச நீதிமன்றம் வழங்கும் வரை, ஜனாதிபதித் தேர்தல் நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரி நேற்று (03) உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருநதார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி, மேற்படி மனு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் – தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளிடமோ கலந்தாலோசிக்கப்படவோ, அல்லது அது தொடர்பில் அறிவிக்கப்படவோ இல்லை எனவும் குறிப்பிட்டார்.

தொடர்பான செய்தி: ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி மனுத் தாக்கல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்