கலால் திணைக்களம் இவ்வருடம் அரையாண்டில் 105 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிப்பு

🕔 July 3, 2024

லால் திணைக்களம் இந்த வருடத்தில் இதுவரை 105 பில்லியன் ரூபாயை வருமானகப் பெற்றுள்ளது. கடந்த வருடம் இதே காலகட்டதுடன் ஒப்பிடுகையில் 17 பில்லியன் ரூபாயை அதிகமாக அந்தத் திணைக்களம் பெற்றிருந்தது.

ஜூன் 30ஆம் திகதிக்குள் இந்த வருமானத்தை கலால் திணைக்களம் பெற்றுள்ளதாக அதன் ஆணையாளர் எம்.ஜே. குணசிறி தெரிவித்துள்ளார்.

“கலால் திணைக்களம் திட்டமிட்டபடி இவ்வருடம் ஜுன் 30ஆம் திகதிக்குள் 105 பில்லியன் ரூபாயை பெற்றுள்ளோம். கடந்த ஆண்டு இதே காலத்தில் நாங்கள் 88 பில்லியன் ரூபாயை மட்டுமே பெற்றோம். அதன்படி திணைக்களத்துக்கு 17 பில்லியன் ரூபாய் அதிகரித்த வருமானம் கிடைத்துள்ளது” என, ஆணையாளர் எம்.ஜே. குணசிறி கூறியுள்ளார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், திணைக்களம் ஏறக்குறைய 20% வளர்ச்சியை அடைய முடிந்துள்ளதாகவும், இது கலால் திணைக்களத்தின் குறிப்பிடத்தக்க சாதனை எனவும் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்