ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் மரணம்
ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூஸா – பிந்தலிய புகையிரத கடவையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
மருதானையில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற ரயிலுடன், மூன்று இளைஞர்ககள் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.