ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு?: சிறைச்சாலை திணைக்களம் தகவல்

🕔 May 22, 2024

வெசாக் போயா தினத்தையொட்டி நாளை (230 ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ள 278 சிறைக் கைதிகளில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட ஞானசார தேரர் இல்லை என, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

போயா தினத்தில் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு மல்வத்து, அஸ்கிரி, ராமன்ன மற்றும் அமரபுர பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இஸ்லாத்துக்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக, கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 15 பேரும், மஹர சிறைச்சாலையில் இருந்து 37 பேரும் உட்பட, நாடு முழுவதிலும் உள்ள சில சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பு பெறவுள்ளவர்களில் பத்து பெண் கைதிகளும் அடங்குவர்.

தொடர்பான செய்தி: ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு, பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்