மிளகாய், மஞ்சள் தூளுடன் 20 கோடி பெறுமதியான கொக்கெய்ன்: பிலிபைன்ஸ் பெண் இலங்கையில் கைது

🕔 May 22, 2024

கொக்கெய்ன் போதைப்பொருளுடன் பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போது, ​​அவரிடம் இருந்து  02 கிலோ 851 கிராம் கொக்கெய்ன் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கொக்கெய்ன் தொகையின் பெறுமதி 200 மில்லியன் (20 கோடி) ரூபாய்க்கும் அதிகம் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பெண் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவிலிருந்து, தோஹா – கட்டார் ஊடாக இலங்கைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் தனது சூட்கேஸில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் கோதுமை மா அடங்கிய 03 பொதிகளுடன் கொக்கெய்ன் போதைப்பொருள் அடங்கிய 03 பொதிகளையும் மறைத்து வைத்திருந்தார்.

அவர் பிலிப்பைன்ஸில் வசிக்கும் 47 வயது உதவி கணக்காளர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபரான பெண்ணின் நண்பியின் ஊடாக – போதைப்பொருள் கடத்தல்காரர்களால், குறித்த போதைப்பொருள் இலங்கைக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலுக்காக – அவருக்கு 1000 அமெரிக்க டொலர் ரொக்கம், பயணிக்க தேவையான விமான டிக்கெட்டுகள் மற்றும் 05 நாட்கள் இலங்கையில் தங்குவதற்கு ஹோட்டல் வசதிகளை வழங்குவதாக போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உறுதியளித்துள்ளதாக மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மசாலாப் பொருள்கள் அடங்கிய பார்சல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கொக்கெய்ன் பொதிகளை – மலேசியா மற்றும் இந்தியாவுக்கு அந்த பெண் இதற்கு முன்பு கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த வெளிநாட்டு புலனாய்வுப் பிரிவினரின் தகவலுக்கு அமைச, சந்தேக நபர் செய்யப்பட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்