சு.கட்சி பதில் தலைவராக விஜேதாச ராஜபக்ஷவை நியமிக்கத் தடை

🕔 April 24, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை நியமிப்பதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், கட்சியின் பொதுச் செயலாளராக துஷ்மந்த மித்ரபால செயல்படுவதைத் தடுத்து மற்றுமொரு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிக தலைமைச் செயலாளர் எடுத்த முடிவுகளை அமுல்படுத்த தடை விதித்து – நீதிமன்றம் மற்றொரு தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் சமர்ப்பித்த முறைப்பாட்டுக்கு அமைய கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த தடை உத்தரவு மே 08 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்