லஞ்சம் பெற்ற குவாஸி நீதவானுக்கு விளக்க மறியல்

🕔 April 24, 2024

ஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் புத்தளம் குவாஸி நீதிமன்ற நீதவான் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 05 ஆயிரம் ரூபா பணத்தை பெற முயற்சித்த போது லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இதனைடுத்து அவர் – புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, மே 06ஆம் திகதி வரை அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

புத்தளம் – வெத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், குவாஸி நீதிமன்ற நீதவான் கைது செய்யப்பட்டதாக – லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விவாகரத்து வழக்கு தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் ஆவணங்களை கையளிப்பதற்காக, புத்தளம் குவாஸி நீதிமன்ற நீதவான் லஞ்சம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்