யானை மீது லொறி மோதி விபத்து: இருவர் மரணம்

🕔 April 5, 2024

காட்டு யானை மீது லொறி ஒன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 06பேர் காயமடைந்துள்ளனர்.

மொரகஹகந்த – நாவுல வீதியில் வண்டுரமுல்ல பகுதியில் இன்று அதிகாலை இந்தச் சம்பவம் நடந்தது.

வீதியை கடக்க முற்பட்ட காட்டு யானை மீது – லொறி மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்தவர்கள் கொங்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருவர் மாத்தளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்