லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு பணிப்பாளர் நாயகம் நியமனம்

🕔 April 2, 2024

ஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டப்ளியு.கே.டி. விஜேரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகளுக்கு அமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க – இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

2023 டிசம்பரில் ஜனாதிபதி லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு மூன்று நியமனங்களை வழங்கினார்.

ஆணைக்குழுவின் தலைவராக நீதியரசர் டபிள்யூ.எம்.என்.பி. இத்தாவல நியமிக்கப்பட்டதுடன், ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சேத்திய குணசேகர மற்றும் கே. பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நியமனங்கள் ஜனவரி 01, 2024 முதல் அமலுக்கு வந்தன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்