ஞானசாரரின் பிணைக் கோரிக்கை நிராகரிப்பு

🕔 April 2, 2024

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் – நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நிலையில், அவரை பிணையில் விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஞானசார தேரருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே – மேற்படி கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

மத அவமதிப்பு வழக்கில் தற்போது விதிக்கப்பட்டுள்ள 04 வருட சிறைத்தண்டனை தொடர்பில் கலகொடஅத்தே ஞானசார தேரரின் சார்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்குமாறு, அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்