சாய்ந்தமருதில் கண்டுபிடிக்கப்பட்ட உணவுகள் அழிப்பு

🕔 March 30, 2024

– நூருல் ஹுதா உமர் –

சாய்ந்தமருது பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடந்த உணவுகளை வைத்திருந்த ஹோட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கடை உரிமையாளர்களை கொண்டே அழிக்கப்பட்டது.

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் – சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.கே.எம். அர்சத் காரியப்பர் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை மற்றும வினியோகம் செய்யும் உணவு நிலையங்களில் இன்று (30) திடீர் பரிசோதனைகள் இடம்பெற்றன.

உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கு இன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றன சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரிகளினால் இந்த கள பரிசோதனையில் பரிசோதிக்கப்பட்டது.

இதன்போது மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுகள், அவற்றை வைத்திருந்தோர்களைக் கொண்டே அழிக்கப்பட்டன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்