கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம்

🕔 March 27, 2024

கிழக்கின் கேடயத்தின் தலைவர் எஸ்.எம். சபீஸின் சொந்த நிதியில், பாலமுனையில் கடினபந்து கிறிக்கெட் பயிற்சிக் கூடாரம் ஒன்றை அமைக்கும் ஆரம்ப நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

அண்மையில் தான் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கடினபந்து கிரிக்கட் பயிற்சிக் கூடாரத்தை அமைப்பதற்கான அடிக்கல்லை சபீஸ் நாட்டி ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது அவர் பேசுகையில்; “எமது இளைஞர்கள் எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியான கிறிக்கெட் போட்டிகளில் வாய்ப்புக்களை பெறவேண்டுமானால், எல்லா ஊர்களிலும் கடினபந்து கிரிக்கெட் விளையாடுவதற்கான தளங்களை உருவாக்க வேண்டும்” என்றார்.

மேலும், பாடசாலைகள் மட்டத்தில் கிறிக்கெட் போட்டிகளை நடத்தி, புதிய திறமையான வீரர்களை எமது பகுதிகளிலும் உருவாக்க வழி செய்யவேண்டும் என்று கூறிய அவர், அதற்க்கான முயற்சிகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

“இன்னும் சில வருடங்களிலாவது – எமது இளைஞர்கள் தேசிய அணியில் இடம்பிடிக்கும் வாய்புக்களை உருவாக்குவதற்கான சிறு முயற்சியாகவே இதனைச் செய்கின்றேன்” சபீஸ் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்