பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: நிர்வாக கட்டடம் முன்பாக ஆர்ப்பாட்டம்

🕔 March 25, 2024

திடீர் சுகவீனம் காரணமாக களனி பல்கலைக்கழக மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக மாணவர்கள் குழுவொன்று இன்று (25) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

களனி பல்கலைக்கழகத்தின் நான்காம் வருட மாணவர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (24) இரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவரை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான ஆம்பியுலன்ஸ் வசதியோ அல்லது வேறு வாகனமோ பல்கலைக்கழக வளாகத்தில் இல்லாத காரணத்தினால், நோயுள்ள மாணவரை வைத்தியசாலையில் அனுமதிப்பது தாமதமாகியுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே, பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியமே மாணவனின் உயிரிழப்புக்குக் காரணமாக அமைந்ததாகக் குற்றம் சுமத்தி சுமார் 150 மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாக கட்டடத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்