சரத் பொன்சேகாவை நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு தடை

🕔 February 19, 2024

க்கிய மக்கள் சக்தியில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வகிக்கும் பதவிகளில் இருந்து, அவரை நீக்குவதற்கு இடைக்காலத் தடை விதித்து – கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (19) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நிருவாகத்துக்கு எதிராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, மாவட்ட நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு மார்ச் 04ம் திகதி வரை அமுலில் இருக்கும்.

வழக்கின் பிரதிவாதிகளாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட சிலர் பெயரிடப்பட்டுள்ளனர்.

தொடர்பான செய்தி: ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து சரத் பொன்சேகா விரைவில் நீக்கப்படவுள்ளார்: என்ன காரணம்?

Comments

புதிது பேஸ்புக் பக்கம்