போதைப்பொருக்கு அடிமையான மகன் அடித்துக் கொலை: 60 வயது தந்தை கைது

🕔 February 19, 2024

போதைப்பொருளுக்கு அடிமையான தனது மகனை கொலை செய்த 60 வயதான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

கும்புகெட்டிய, வெல்கல – நெல்லிய பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) இச் சம்பவம் நடந்துள்ளது.

உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலையான மகன் போதைப்பொருள் கொள்வனவு செய்ய பணம் கேட்டு தனது தந்தையுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்றும், மகனும் தந்தையும் பணம் தொடர்பாக தகராறில் ஈடுபட்டதாகவும், இதன் போது தந்தை மகனை சுத்தியலால் தாக்கியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைச் சம்பவம் தொடர்பில் தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கும்பகெட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்