காணாமல் போன தங்கக் குதிரை, தனக்குக் கிடைத்த ரத்தினம் பதித்த வாள்: முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வெளியிட்ட தகவல்கள்

🕔 January 25, 2024

னது மகள் வீட்டில் அண்மையில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்தில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒரு குதிரை காணாமல் போனதாக வெளியான செய்தி பொய் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தனது மூத்த மகளின் வீட்டில் தங்கக் குதிரை இருந்ததாகக் கூறப்படும் கதை பொய் என்றும், அந்த வீட்டில் உணவும், பானமும் மாத்திரமே திருடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனக்கு ரத்தினக் கற்கள் பதித்த தங்க வாளை பரிசாக வழங்கியதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த போது இந்த வாள் வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது அந்த வாள் கொழும்பு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்