ஹரின், மனுஷ ஆகியோரின் மனு மீதான விசாரணை நிறைவு: தீர்ப்பு ஒத்தி வைப்பு

🕔 January 23, 2024

க்கிய மக்கள் சக்தியில் தமது உறுப்புரிமை ரத்துச் செய்வதற்கு அந்தக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிராக, அமைச்சர்களான ஹரின் பெணான்டோ மற்றும் மனுஷ நாணயக்காரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

அதன்படி, குறித்த மனுக்கள் மீதான விசாரணையை நிறைவுசெய்த உச்ச நீதிமன்றம், தீர்ப்பு தொடர்பான அறிவிப்பை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

இந்த மனு மீதான விசாரணை விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இடம்பெற்றது.

ஹரின் பெணான்டோ மற்றும் மனுஷ நாணயகார ஆகியோர் – அரசாங்கத்துக்கு ஆதரவளித்துள்ளதோடு, அமைச்சுப் பதவிகளையும் பெற்றமையினை அடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டதாக அந்தக் கட்சி அறிவித்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்