அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் நாளை ஆரம்பிக்காது: சீரற்ற காலநிலை காரணமாக தீர்மானம்

🕔 January 10, 2024

க்கரைப்பற்று வலயப் பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக மூடப்பட்டு நாளை திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் 16ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பெய்து கடும் கடும்மழை, ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக – எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (16ம் திகதி) அக்கரைப்பற்று வலயப் பாடசாலைகளை ஆரம்பிக்க -மாகாணக் கல்விப் பணிப்பாளரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று வலகயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

எனவே நாளை (2024.01.11) மற்றும் நாளை மறுதினம் (2024.01.12) பாடசாலைகள் நடைபெறாது என்றும், இந்த இரு தினங்களுக்கும் பதிலாக எதிர்வரும் 2024.01.20 (சனிக்கிழமை) மற்றும் 2024.01.27 (சனிக்கிழமை) ஆகிய நாட்களில் பதில் பாடசாலைகள் நடைபெறும் எனவும் வலயக் கல்விப் பணிப்பாளர் – பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்