மோசடி வியாபாரிகளிடமிருந்து 22 கோடி ரூபாய் அபராதம் அறவீடு

🕔 November 16, 2023

நாடளாவிய ரீதியில் இந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் 22 கோடி ரூபாய் அபராதம் அறவிடப்பட்டுள்ளதாக – நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல், இருப்புக்களை மறைத்து வைத்தல், காலாவதியான பொருட்களை விற்பனை செய்தல், விலைகளை காட்சிப்படுத்தாமை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரையில் இந்த சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டன.

நாடு முழுவதும் சுமார் 22,000 சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டு அவற்றில் 19,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை கூறியுள்ளது.

நேற்று (15) மாத்திரம் பொலன்னறுவை மற்றும் நுவரெலியா பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட பல சுற்றிவளைப்புக்களின் மூலம் 04 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்